பிரான்சில் கால்பந்து கொண்டாட்டங்களில் பாரிய மோதல்! 400-க்கும் மேற்பட்டோர் கைது
செம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாரிய மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைநகர் பாரிஸில் பேருந்து, தொடருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகளைப் பாதித்த கலவரங்களைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை அதிகாரிகள் காயம்
இதன்படி பட்டாசுகளும் தீப்பந்தங்களும் வெடிக்கப்பட்ட நிலையில், இந்த மோதலில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகர மையத்தில் கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது PSG அணிக்குக் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியாக அமைந்தபோதிலும், பிரெஞ்சு அணியின் 2025 வெற்றியானது உயிரிழப்பில் முடிந்த கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, இது கால்பந்து தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டாகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |