சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதர் குழுவுடன் மட்டக்களப்பில் முக்கிய சந்திப்பு (படங்கள்)
சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர்களுடனான சந்திப்பொன்று மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் நடைபெற்றது.
இன்று காலை 9 மணி தொடக்கம் 11 மணிவரை இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது சமகால அரசியல், சிவில் சமூக செயற்பாட்டுக்கான அரச தரப்பு அடக்குமுறைகள், காணி அபகரிப்பு மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலக செயற்பாடு என்பன விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
இதில் மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சபா. சிவயோகநாதன், பல்சமய ஒன்றிய செயலாளர் அருட்பணி கந்தையா ஜெகதாஸ், பொருளாதார நிபுணர் கணேசமூர்த்தி, பெண்கள் சம்மேளன இணைப்பாளர் ரஜிதா, அடையாளம் நிறுவனத்தின் மட்டக்களப்பு ஆய்வாளர் கார்த்திகா, மனித உரிமை அபிவிருத்தி நிறுவன இணைப்பாளர் பரசுராமன், சூரியா பெண்கள் நிறுவனத்தின் முகாமையாளர் அனுராதா மற்றும அம்பாறை மாவட்டத்திலிருந்து PCA நிறுவனத்தின் இணைப்பாளர் ராஜேந்திரா, AWF நிறுவனத்தின் பணிப்பாளர் வாணி சைமன் மற்றும் அந்நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.