தந்தையின் இறுதிச் சடங்கில் இல்லாத மொஜ்தாபா கமேனி! காரணம் இதுதான்
போர் இன்னும் முடிவடையாததால் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியால் தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞரான முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது மிகவும் பலவீனமான போர் நிறுத்தம் மட்டுமே நிலவுவதாகவும், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மிகவும் கடினமான விஷயங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அவர் பொதுவெளியில் தோன்றுவதற்கு உண்மையில் வாய்ப்பில்லை என இஸ்லாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானியத் தலைவர்கள் ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டேப் நீரிணை ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய கிழக்கிற்கான ஒரு புதிய உத்தியை வகுத்து வருவதாக அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது ஈரானிய அரசாங்கம் எதிர்ப்பை காட்டிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதைப் பற்றி சிந்தித்து வருவதாகவும், இதன் காரணமாக அவர்களிடம் ஒரு புதிய தன்னம்பிக்கையைக் காண முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவற்றுடன், ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவளிப்பதும், இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது லெபனானைப் பாதுகாப்பதும் ஈரானின் தற்போதைய முன்னுரிமைகளில் முதலிடம் வகிக்கின்றன என்றும் முகமது இஸ்லாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |