கேவலமான எப்ஸ்டீனுடன் தொடர்பு...! ட்ரம்ப்பின் மனைவி வாக்குமூலம்
சர்ச்சைக்குரிய குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மெலனியா ட்ரம்ப் மறுத்துள்ளார்
வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கேவலமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் என்னை தொடர்புபடுத்தும் பொய்கள் இன்றே முடிவுக்கு வர வேண்டும்.
அடிப்படையற்ற பொய்
என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி, பணிவு மற்றும் மரியாதை ஆகியவை அறவே இல்லை.

அவர்களின் அறியாமையை நான் எதிர்க்கவில்லை, மாறாக எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் கீழ்த்தரமான முயற்சிகளை நான் நிராகரிக்கிறேன் என்று அவர் கூறினார்.
எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்ததோடு, நானும் எனது வழக்கறிஞர்களும் இந்த ஆதாரமற்ற மற்றும் அடிப்படையற்ற பொய்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியுள்ளோம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு பெண்ணும் விரும்பினால், தனது கதையை பொதுவெளியில் சொல்வதற்கான நாள் அவளுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான், உண்மை நமக்குத் தெரியவரும் எனக்கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |