அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

Anuradhapura Sri Lankan Peoples Law and Order Ramanathan Archchuna
By Dhilak Feb 03, 2025 01:38 PM GMT
Report

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அநுராதபுரம் தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் காவல்துறை தலைமையக பிரதான பரிசோதகருக்கு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (03) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

குற்றச்சாட்டுகள்

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வழியாக கொழும்புக்கு காரில் பயணித்தபோது சாலியபுர கல்வல சந்தியில் அநுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு | Member Of Parliament Archchuna Appears In Court

இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்ததை அறிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சட்டத்தரணி சுனந்த தென்னகோன் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தார்.

வழக்கில் சரியான சந்தேகநபர்

இதனை தொடர்ந்து, வழக்கில் சந்தேகநபரின் பெயர் அர்ச்சுன லோச்சன என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டமையடுத்து, சரியான சந்தேகநபரை அடையாளங்கண்டு அறிவிக்குமாறு நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு | Member Of Parliament Archchuna Appears In Court

பின்னர், மேலும் ஒரு அறிக்கையின் மூலம், அநுராதபுரம் காவல்துறை தலைமையகம் வழக்கில் சரியான சந்தேக நபரின் பெயரை இராமநாதன் அர்ச்சுனா என்று திருத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சந்தேக நபராக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு: கைவிரித்தது மொட்டுக் கட்சி!

மகிந்தவின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு: கைவிரித்தது மொட்டுக் கட்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026