முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபி - வெளியான அறிவிப்பு

United Human Rights Sri Lankan Tamils Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day
By Independent Writer May 13, 2025 02:33 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

இறுதி யுத்தத்திலே கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய காலத்திலே தற்போதைய அரசும் கடந்த கால சூழ்நிலைகளை அவதானிக்கின்ற போது போரிலே இறந்த அனைவருக்குமான ஒரு பொது நினைவுத் தூபி ஒன்றை அமைக்க திட்டமிடுறார்கள்.

உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்க அறிவிப்பு

உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்க அறிவிப்பு

இனமாக அழிக்கப்பட்டோம்

அதுவும் முள்ளிவாய்க்காலிலே நாங்கள் நிறுவ இருக்கின்ற தூபியும் வித்தியாசமானது. அது எங்களுடைய இன அழிப்பை இல்லாமல் போக செய்கின்ற ஒரு முயற்சியாக இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபி - வெளியான அறிவிப்பு | Memorial Monument In Mullivaikkal

இது நாங்கள் இனமாக அழிக்கப்பட்டோம் என்பதை உரத்து கூறுகின்ற ஒரு நிகழ்வாக இருக்கிறது.

ஆகவே அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் செய்ய முனைந்தாலும் நாங்கள் எங்களுடைய உணர்வுகளின் அடி தளத்திலே இந்த இடத்திலே நிறுவுகின்ற நினைவுத்தூபி என்பது வருடாவருடம் காலாகாலமாக நாங்கள் அழிக்கப்பட்டோம்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் தொகைவகையின்றி கொல்லப்பட்டோம் உரத்து கூறுகின்ற ஒரு விடயமாகவே நாங்கள் அதனை பார்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

தமிழர்கள் அநுரவுக்கு வாக்களித்தால் மாற்றம் : வாக்களிக்காவிட்டால் இனவாதமா !

தமிழர்கள் அநுரவுக்கு வாக்களித்தால் மாற்றம் : வாக்களிக்காவிட்டால் இனவாதமா !

பிரமாண்டமான நினைவுத்தூபி 

கனடாவில் பிரண்டன் நகரில் பிரண்டன் மேஜருடைய ஒத்துழைப்பில் பிரமாண்டமான நினைவுத்தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட அந்த நிகழ்விலே நானும் பிரசன்னமாகி கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது. இன்றைய நாளில் அதனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபி - வெளியான அறிவிப்பு | Memorial Monument In Mullivaikkal

அந்த இடத்திலேயே அவர்களுக்கு இருக்கிற சுதந்திரம் நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கின்றது. எமது மண்ணிலும் அவ்வாறான ஒரு நினைவுத் தூவியை நாங்கள் அமைக்க வேண்டும்.

இந்த இடத்திலே அதற்குரிய பல்வேறு விடயங்களை நாங்கள் உருவாக்க வேண்டும். அதற்கு இந்த காணியை உரியவர்களிடமிருந்து பெற்று மிக விரைவிலே தொடர்கின்ற ஆண்டுகளிற்குள்ளே இந்த இடத்திலே அதனை நினைவு கூரக்கூடிய வகையில் இங்கே கொல்லப்பட்ட மக்கள் இந்த இடத்திலே இறுதி யுத்தத்திலே இறந்து போனவர்களை நாங்கள் நினைவு கூருகின்ற வகையில் அவர்களுடைய பெயர்களையும் தாங்கி வரக்கூடிய வகையில் சில நினைவு விடயங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

காலம் நெருங்கி வருகின்றது

ஆகவே அதற்கான காலம் எமக்கு நெருங்கி வருகின்றது. அதனை தொடர்கின்ற நாட்களிலேயே நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். அதற்கு பலருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

அதற்கு நாங்கள் ஆரம்பிக்கின்ற போது அத்தனை சிவில் சமூகங்களோடும், மக்களோடும் அரசியல் சமூகங்களோடும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுடைய ஒத்துழைப்போடும் இங்கு வாழ்கின்ற மக்களுடைய ஒத்துழைப்போடும் நினைவு முற்றத்தை நிச்சயமாக நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதை இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

தமிழர்கள் அநுரவுக்கு வாக்களித்தால் மாற்றம் : வாக்களிக்காவிட்டால் இனவாதமா !

தமிழர்கள் அநுரவுக்கு வாக்களித்தால் மாற்றம் : வாக்களிக்காவிட்டால் இனவாதமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025