1990களில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்!
யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதற்கு பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது.
வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் குறித்த நினைவுச் சதுக்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1990 மற்றும் 1991 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமது பிரதேச மக்களின் நினைவுகளை நினைவுகூர ஒரு பொது நினைவுச் சதுக்கம் அமைக்க சபையின் உறுப்பினர் திருநாவுக்கரசு சிவகுமாரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்த நிலையில் குறித்த முயற்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் குறித்த தூபியை அமைக்க சபை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேலணை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுகளை மையப்படுத்தி நினைவுகூரும் நோக்கத்தின் அடிப்படையில் குறித்த நினைச் சதுக்கம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் சபையின் உறுப்பினர்கள் அதற்கு தமது சம்மதத்தை வழங்கியமைக்கு அமைய பிரதேச சபை அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |