யாழில் இளைஞன் அதிரடி கைது
புதிய இணைப்பு
யாழில் (Jaffna) கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறையினர்
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலங்களுக்கு அமைவாக சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
மானிப்பாய் - சுதுமலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி செய்து வந்த 36 வயதுடையே ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி
கோப்பாய் காவல்துறையினரும் கோப்பாய் விசேட காவல்துறை புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த நபரை கைது செய்துள்ளார்கள்.
இதன்போது 600 லீட்டர் கோடா, 60 லீட்டர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் என்பன கோபாய் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
குற்றப்பிரதேசமானது மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி என்பதால், சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் மானிப்பாய் காவல் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30.05.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் (Chunnakam) காவல்துறையினரில் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நாடத்திய போது 15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராமம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
குறித்த நபர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், காவல்துறையினர் சந்தேக நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
