யாழில் திடீரென மாயமான ஆடுகள்...! காவல்துறையின் வேட்டையில் சிக்கிய நபர்கள்
யாழில் (Jaffna) மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய இருவர் நேற்றிரவு சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - தச்சன் தோப்பு பகுதியில் ஆறு ஆடுகள் களவாடப்பட்டு இருந்தன.
இது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
தீவிர நடவடிக்கை
அந்தவகையில் சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலின் கீழ், சாவகச்சேரி காவல் நிலைய உப காவல்துறை பரிசோதகர் திரு.மயூரன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த வாகனங்களின் தகட்டு இலக்கங்களை பெற்று அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் அந்த வாகனம் புத்தள மாவட்ட பதிவில் இருந்தமையும், அந்த வாகனத்தை துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியமையும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நேற்றிரவு நெல்லியடி - துன்னாலை பகுதியில் வைத்து களவுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், 5 ஆடுளையும் மீட்டதுடன் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
