யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
யாழில் (Jaffna) குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.
குறித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி, 3 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம் சண்முகராசா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த நபரை நேற்றைய தினம் காணவில்லை என உறவினர்கள் தேடினர்.
இதன்போது அவர் கிணற்றடியில் சடலமாக காணப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
