ரொனால்டோவா...மெஸ்சியா...பீலேயின் தெரிவு - இனி இவர் தான் அடுத்த ஜாம்பவான்
கடந்த 29 ஆம் திகதி மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரில் யார் நிலையானவர் என தேர்ந்துள்ளார்.
பீலே பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர்.
1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது.
அவர் அளித்த பேட்டி
இந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி அதிகாலை பீலே தனது 82வது வயதில் புற்றுநோய் காரணத்தால் உயிரிழந்தார்.
இதனிடையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
குறித்த பேட்டியின் போது பீலேவிடம், தற்போதைய கால்பந்து வீரர்களில் இரண்டு ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என கேட்கப்பட்டது.
நிலையான வீரர்
அதற்கு பீலே கூறுகையில், இப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகவும் நிலையான வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நீங்கள் மெஸ்ஸியை புறந்தள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
