AI-யுடன் உரையாட சிறுவர்களுக்கு தடை...! மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) கதாபாத்திரங்களைச் சிறுவர்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
இத்தொழில்நுட்பத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்படும் வரை இத்தடை தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரங்களைச் சிறுவர்கள் பயன்படுத்துவது வரும் வாரங்களில் நிறுத்தப்படும்.
மெட்டா நிறுவனம்
மெட்டாவின் பொதுவான செயற்கை நுண்ணறிவு அசிஸ்டெண்ட் சேவையைச் சிறுவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இருப்பினும், மனிதர்களைப் போலவே உரையாடக்கூடிய பிரத்யேக செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரங்களுடன் அவர்கள் இனி உரையாட முடியாது.

தங்கள் வயதை 18-க்குக் கீழ் எனப் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தின் மூலம் சிறுவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இச்சேவை துண்டிக்கப்படும்.
சமூக ஊடகங்கள் சிறுவர்களின் மனநலனைப் பாதிப்பதாக தெரிவித்து, மெட்டா, டிக்டாக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் அடுத்த வாரம் வழக்கு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே கேரக்டர் ஏஐ நிறுவனத்தின் சாட்பாட்டுடன் உரையாடிய சிறுவன் ஒருவர் தவாறான முடிவெடுக்க தூண்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு அந்நிறுவனத்திற்கு நெருக்கடியைத் தந்தது.
இந்தநிலையில், இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க மெட்டா நிறுவனம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |