மெக்சிகோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. முதல்வர் உட்பட 18 பேர் பலி - பரபரப்பு பின்னணி!

Mexico Death
By Kiruththikan Oct 07, 2022 08:15 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நேற்று நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் முதல்வர் மற்றும் அவரது தந்தை உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவத்தினரும், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் முடக்கிவிடப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என முதல்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கு தெரியவந்துள்ளது.

ராணுத்தினருக்கு அதிக அதிகாரங்கள்

மெக்சிகோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. முதல்வர் உட்பட 18 பேர் பலி - பரபரப்பு பின்னணி! | Mexico Gunfire Kills 18 People Including Mayor

மெக்சிகோவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் அண்மைக்காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு ராணுத்தினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அதிக அளவிலான அதிகாரங்களை அவர் வழங்கினார்.

இதனால் தற்போது மெக்சிகோவின் அனைத்து நகரங்கள் மற்றும் ஊர்களில் காவல்துறையினரின் அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகப்படியான அதிகாரத்தால் ராணுவத்தினர் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.

இது, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

பதிலடியாக துப்பாக்கிச் சூடு   

மெக்சிகோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. முதல்வர் உட்பட 18 பேர் பலி - பரபரப்பு பின்னணி! | Mexico Gunfire Kills 18 People Including Mayor

ராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை மெக்சிகோவின் குரீரோ மாகாணத்தில் உள்ள சான் மிக்யூல் டோடோலாபன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்நகர முதல்வர் கான்ராடோ மென்டோஸா வந்திருந்தார்.

அவருடன் அவரது தந்தையும் உடனிருந்தார். அவரும் அந்நகரின் முன்னாள் முதல்வர் ஆவார். இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கு கார்கள் மற்றும் உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள், திடீரென அங்கிருந்தவர்களை இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இதனால் அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சுமார் 2 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் முதல்வர் கான்ராடோ மென்டாஸா, அவரது தந்தை உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படை

மெக்சிகோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. முதல்வர் உட்பட 18 பேர் பலி - பரபரப்பு பின்னணி! | Mexico Gunfire Kills 18 People Including Mayor

துப்பாக்கிச் சூட்டில் முதல்வரும், பொதுமக்களும் உயிரிழந்தது மெக்சிகோவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

21 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023