மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இன்று நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இதனைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி மட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை அடுத்த மாதம் 10ஆம் திகதி நடத்த, நேற்று (19) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சி நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |