புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்

Saudi Arabia World
By Shalini Balachandran Feb 28, 2025 09:10 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

தங்கள் எல்லைகளில் திரண்ட புலம்பெயர் மக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் (Saudi Arabia) படைகள் கண்மூடித்தனமான பலத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுதொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில், இறப்புகள், காயங்கள் மற்றும் பெண்கள் தகாத முறைக்கட்படுத்தப்ட்டதும் அம்பலமாகியுள்ளது. 2019 மற்றும் 2024 இற்கும் இடையில் அண்டை நாடான யேமனில் இருந்து கடக்க முயற்சிக்கும் எத்தியோப்பிய புலம்பெயர் மக்களே, தாங்கள் எதிர்கொண்ட கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2022 இல் டசின் கணக்கானவர்களுடன் சவுதியின் நஜ்ரான் மாகாணத்தில் இரவு கடந்து சென்ற போது சவுதி இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பலர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அதிக செலவில்லாமல் முகத்தை வெண்மையாக்கும் சீரம் வேண்டுமா : இதோ வழி

அதிக செலவில்லாமல் முகத்தை வெண்மையாக்கும் சீரம் வேண்டுமா : இதோ வழி

 

 எல்லைக் காவலர்கள் 

இராணுவத்தின் துப்பாக்கிச் சூடுக்கு பயந்து பல புலம்பெயர்ந்தோர் தப்பிக்க முயன்றபோது குன்றிலிருந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மற்றவர்கள் பிடிக்கப்பட்டதுடன் அத்தோடு துப்பாக்கிச் சூடுக்கு காயமடைந்த நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் | Migrants Gather At The Saudi Arabian Border

2023 ஒகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் ஆணையம் ஒன்றின் அறிக்கையில், சவுதி எல்லைக் காவலர்கள் மார்ச் 2022 முதல் ஜூன் 2023 வரை யேமனின் தெற்கு எல்லையில் நூற்றுக்கணக்கான எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை கொன்றனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகளை தகாத முறைக்குட்படுத்த மறுத்த எத்தியோப்பிய நபரை சவுதி எல்லைக் காவலர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்

சட்டவிரோதமாக பயணம் 

சவுதி அரேபியாவில் சுமார் 750,000 எத்தியோப்பிய குடியேறியவர்கள் உள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்படுவதுடன் கட்டுமானம், பண்ணைகள் மற்றும் வீட்டு வேலையாட்கள் போன்றவற்றில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

வேலை தேடி ஏமன் வழியாக சட்டவிரோதமாக பயணம் செய்யும் எத்தியோப்பியர்கள் உள்நாட்டு மோதல்கள், வறுமை மற்றும் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் | Migrants Gather At The Saudi Arabian Border

2022 மற்றும் 2023 இற்கும் இடையில், இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட எத்தியோப்பியர்களின் எண்ணிக்கை 32 சதவிகிதம் அதிகரித்து 96,670 ஐ எட்டியது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் புலம்பெயர் மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க சவுதி அரேபியா கொடூர முறையைப் பயன்படுத்துவதை நிறுத்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் கொடூரம் : மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் கொடூரம் : மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025