வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!
வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் ஜூலை 23 அன்று நடைபெற்ற ஒரு விருந்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (28.07.2026) மாலை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யபட்ட நபர் சீதுவ, முகலங்காமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு குற்றப் பிரிவு
கைது செய்யபட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாடகைக் காரைப் பெறுவதற்காக இவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றி, குற்றத்திற்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாணத்தின் வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |