வங்கதேசம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டாக்கா மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையத்தின்படி, மதியம் 12:09 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் வானிலை ஆய்வு மைய தகவலின்படி, டாக்காவின் அகர்கானில் உள்ள பிஎம்டி நில அதிர்வு மையத்திலிருந்து வடகிழக்கே 185 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் நிலைகொண்டிருந்தது.
இந்தியாவின் மேகாலயாவில் நிலநடுக்கம்
இதற்கிடையில், பங்களாதேஷைத் தாக்கிய 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்தியாவின் மேகாலயாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேகாலயாவில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தியாவின் குஜராத்தில், கட்ச் மாவட்டத்தில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது. மதியம் 12:41 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது, அதன் மையம் பச்சாவிலிருந்து வடகிழக்கு (NNE) சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
