வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் எதிர்வரும் 2027.09.12 அன்று முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புனரமைப்பு செய்யாத நிலை
இதேவேளை சுதந்திரபுரம் பிரதான வீதி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி மக்கள் பாவனைக்காக நேற்றயதினம் (30) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன திறந்து வைத்துள்ளார்.

குறித்த வீதியானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யாத நிலையில் 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி - சண்முகம் தவசீலன்



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |