ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் உத்தரவை ஏற்க மறுக்கும் அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட தலைவர்கள் பதவிவிலகத் தேவையில்லை என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய உத்தரவுக்கு அமைய இவர்கள் பதவி விலகவிருந்த நிலையில், இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபரிடம் முறைப்பாடு
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, புதிய ஊழியர் ஒருவரை நியமிக்க விரும்புவதாகக் கூறி அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும், அதற்கேற்ப செயற்பட வேண்டாம் எனவும், அமைச்சர் விரும்பினால் தலைவர்களை பதவிகளில் இருந்து நீக்கட்டும் எனவும் சாகர காரியவசம் கூறியிருக்கிறார்.
அமைச்சர் பெரமுனவினால் நியமிக்கப்பட்ட பெருந்தோட்ட அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சிகளின் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்