மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை ஈரான் மறுத்துள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் மொஜ்தாபா கமேனி, முழுமையான மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதாக மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
மொஜ்தாபா காமேனியுடன் நடைபெற்ற 7 முதல் 8 மணி நேர நீண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், தொடர்ந்து பல மணிநேரம் அமர்ந்து விரிவாக ஆலோசிக்க முடிகிற ஒருவருக்கு எவ்வித உடல்நலக் குறைபாடும் இருக்க முடியாது என கூறி இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முப்படைகளின் தலைமை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதிகள், புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவில் (SNSC) முக்கிய மூத்த தளபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுப் பாதுகாப்புத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் இழப்பீடு கோரி வருகின்றன. அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இழப்பீடு வேண்டும் என ஈரான் கோரிய நிலையில், கடந்த காலப் பிராந்திய மோதல்களின் சேதங்களுக்கு ஈரானிடமிருந்து இழப்பீடு பெறப்படும் என வாஷிங்டன் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அமெரிக்காவுடனான மோதலில் அடுத்தகட்ட ராணுவ உத்திகள் குறித்து உச்சத் தலைவருடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |