சமுர்த்தி வங்கியில் பாரிய பண மோசடி - குற்றப்புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கை
சமுர்த்தி வங்கியொன்றில் வைப்புச் செய்தவர்களிடம் இருந்து 5000 ரூபா பணத்தை மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரம்மல பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் குறித்த மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் இடைநிறுத்தப்பட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளரும் இரண்டு வர்த்தகர்களும் அடங்குவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த சமுர்த்தி வங்கியின் வைப்பாளர்களுக்கு கடன் வழங்கும் வகையில் போலி ஆவணங்களை தயாரித்து இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட சந்தேகநபர்கள் நால்வரும் நேற்று ஹெரொம்ப பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
48 மற்றும் 56 வயதுடைய இந்த சந்தேகநபர்கள் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
