தலைக்கவசத்தினுள் மறைத்து வைத்திருந்த பணம்! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி
கிளிநொச்சியில் பணியின் போது உரிய நடைமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போக்குவரத்துப் காவல்துறை அதிகாரி ஒருவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இதன்படி கடந்த 01.04.2026 அன்று மாலை முதல் உடனடியாகப் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி காலை, பராந்தன் சந்திப்புப் பகுதியில் கிளிநொச்சி 01 உதவி காவல்துறை கண்காணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருமான அங்கம்மனவின் நேரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
தலைக்கவசத்தினுள் ரூ. 7,000
இந்தத் திடீர் சோதனையின் போது, குறித்த அதிகாரியின் பணி இடத்திற்கு அருகாமையில் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் ரூ. 1,000, அவரது பணப்பையில் (Wallet) இருந்த ரூ. 900 மற்றும் அவரது தலைக்கவசத்தினுள் (P-Cap) மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 7,000 ஆகியவற்றை உயர் அதிகாரி கண்டெடுத்துள்ளார்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் முறையே PR 1489/26, 1490/26, 1491/26 ஆகிய வழக்கு எண்களின் கீழ் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி காவல்துறை ஒழுக்க விதிகளை மீறிச் செயல்பட்டமைக்காகவும், சந்தேகத்திற்குரிய பணத்தை வைத்திருந்தமைக்காகவும் குறித்த காவல்துறை அதிகாரி, 01.04.2026 அன்று மாலை 18:00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |