கதிர்காம பாத யாத்திரையை முடக்கும் நவ சதிகளும்... சவூதி தண்டனை அனோஜனும்!
கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கூட்டப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது பௌத்த தொல்பொருள் உள்ளதாகக் கூறப்படும் நிலங்களை அபகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த 5 மாத காலத்திற்கு இடையில் நடத்தப்பட்ட காவிகளின் இரண்டாவது திரள்நிலை, வடக்கு கிழக்கில் அடாவடி விகாரைகளை நிறுவிய பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கான காவிகள் கலந்துகொண்டனர்.
அரசிலிருந்து பௌத்தத்தைப் பிரிக்க முடியாது, பௌத்த மத நம்பிக்கையற்றவர்கள் இந்த நாட்டை ஆளக்கூடாது, புத்தர் சிலைகளை யாரும் அவமதித்தால் அது குற்றம் எனப் பல விடயங்கள் அடுக்கப்பட்டன.
மாநாட்டில் உரையாற்றிய இந்துரகரே தம்மரத்ன தேரர் போன்றவர்கள், வடக்கு கிழக்கில் பௌத்த தொல்பொருள் தளங்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை, தமிழர்கள் என்னதான் நில அபகரிப்பு குறித்துக் கத்தினாலும் வடக்கு கிழக்கில் 1,000 இற்கும் மேற்பட்ட பௌத்த தொல்பொருள் இடங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு தேவை என அலறினார்.
இந்த பௌத்த மாநாடு இடம்பெற்ற சமகாலத்தில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியக் கதிர்காம யாத்திரையால் யால-குமண காடுகள் பாழ்பட்டுப்போவதான குய்யோ முறையோக்கள் வந்துள்ளன.
ஏற்கனவே இந்தப்பாதயாத்திரையுடன் சுப்பிரமணி என்ற நாய் கிழக்கு நகரமான கல்முனை வழியாகச் சென்றபோது உள்ளூர் முஸ்லிம் ஒருவர் நாயை உதைப்பது காணொளியில் பதிவான பின்னர், சவூதி அரேபியாவில் பணிபுரியும் கல்முனைத் தமிழர் அனோஜன் இறைதூதர் நபி குறித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிந்தனைப் பதிவுக்காக அவர் அங்கு குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் றியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் இந்த யாத்திரையை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற திட்டங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |