திருகோணமலையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
corona
sri lanka
people
By Shalini
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை பொலிஸ் பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் சீனக்குடா பொலிஸ் பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்