பெற்ற குழந்தையை கொன்று கழிவறை பாத்திரத்தில் மறைத்து வைத்த தாய் கைது
பிறந்த பின்னர் குழந்தையைக் கொன்று சடலத்தை பையில் வைத்து வீட்டில் உள்ள கழிவறைப் பாத்திரத்தில் மறைத்து வைத்திருந்த 23 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் தெரிபா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்
கடுமையான வயிற்றுவலி என கூறி குறித்த பெண் தெரிப்பஹா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிபாஹா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிகிச்சை பெற்று வந்த பெண் வைத்தியசாலையை விட்டு ஓடியதில் சந்தேகம் அடைந்த வைத்தியர் இது குறித்து அப்பகுதி குடும்ப சுகாதார அதிகாரிக்கு அறிவித்து விசாரணை நடத்துமாறு கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டிற்கு சென்ற குடும்ப சுகாதார உத்தியோகத்தர்
குடும்ப சுகாதார உத்தியோகத்தர் அவரது வீட்டிற்குச் சென்று, கழிவறையில் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சிசுவின் சடலத்தைக் கண்டு, வைத்தியசாலை வைத்தியர் மற்றும் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
