தழிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த கஜேந்திரகுமார் அணி
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழகத்தில் பல முக்கிய அரசியல் சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தில் வைத்து இன்று (04) அவரைச் சந்தித்தனர்.
இதன்போது தமிழ்நாட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரிடம் எழுத்துமூலமான கோரிக்கை கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பில் கலந்துகொண்டோர்
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரட்ணம் சுகாஷ், செல்வராசா கஜேந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், நடராஜர் காண்டீபன், கே. வி. தவராசா, தருமலிங்கம் சுரேஷ், ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ #உதயநிதி #ஸ்டாலின் அவர்களுடனான 04/07/2026 சந்திப்பு! pic.twitter.com/4ELaX9FPaG
— Gajen Ponnambalam MP (@GGPonnambalam) July 4, 2026
இதேவேளை குறித்த பிரதிநிதிகள் குழு நேற்று (03) சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று (03) சென்னையிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமைப் பணிமனையில் அக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்