வடக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
மானிப்பாய்
ரணம் மிகுந்த இந்த மே மாதத்தில் மண்ணில் பட்ட வலிகளை கடத்தும் முனைப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றும் வடக்கின் பல பகுதிகளில் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை சந்தை வர்த்தகர்களின் ஆதரவில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்ச்சியாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களை சுமந்த மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.



செய்தி - தீபன்
கிளிநொச்சி
வர்த்தக நிலையங்கள் மூடிப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது வருகின்றது.
முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
செய்தி - எரிமலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |