உயிர்நீத்தவர்களுக்காக நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்!
Tamils
Mullaitivu
Mullivaikal Remembrance Day
By Kanna
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று புதன்கிழமை (18) நந்திக்கடலில் மலர்தூவி முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்" என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் ரவிகரனுடன் அஞ்சலியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி