மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வும் கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டு நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பொன் செல்வராசா தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லடியிலுள்ள விநாயகர் ஆலய முன்றில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக அஞ்சலிச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையடுத்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. அடுத்து கிறிஸ்தவ பாடல் இசைக்கப்பட்டு கிறிஸ்தவ மற்றும் இந்து மத ஆசியுரைகள் வழங்கப்பட்ட கஞ்சி பரிமாறப்பட்டது.
நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் சி.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா சிறிநேசன், பா.அரியநேத்திரன், மன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, மாநகர சபை உறுப்பினர்க்ள உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.