பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples England
By Dilakshan May 18, 2024 09:00 PM GMT
Report

பிரித்தானியாவில் (Britain) உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவு கூரப்பட்டுள்ளது.

18.05.2024 அன்று மாலை 5.15 மணி அளவில் நினைவேந்தலில் முன்றலில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்


இனப்படுகொலையின் சாட்சி

அதனைத்தொடர்ந்து, பிரித்தானிய கொடியினை ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை சதா ஏற்றி வைத்துள்ளார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Remembrance In Britain

அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவோசை ஒலிக்க பிரதான நினைவுச்சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது தந்தையை இழந்த தமிழீழ காவல்துறை துணை பொறுப்பாளர் மாதவன் மாஸ்ரர் ஏற்றி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

தொடர்ந்து, நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையில் இருந்து இனப்படுகொலையின் சாட்சியான முகிலினி தனது உணர்வுகளை அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்

இனவழிப்புக்கு நீதி

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுவனான ஆதிசன் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை உரையாக தொகுத்து வழங்கினார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Remembrance In Britain

தொடர்ந்து தொழிற் கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க சம நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்கால் வலி சுமந்த நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.

இந்நிகழ்வானது, எமது தாயக விடுதலை அடையும் வரையும் எமது இனவழிப்புக்கு நீதி கிடைக்கும் வரையும் எமது பயணம் தொடரும் என்பதனை சுட்டி காட்டும் வகையில் அமைந்திருந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014