விபரீதத்தில் முடிந்த தகராறு - வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!
Sri Lanka Police Investigation
By pavan
மீரிகமவில் அமைந்துள்ள பொது வர்த்தக நிலையத்தில் வியாபாரிகள் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இந்த தகராறில் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த நபர் தற்போது கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி