யாழில் கொலை வெறித் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் பாதிப்பு

Jaffna Sri Lanka Law and Order
By Shalini Balachandran Dec 25, 2024 02:31 PM GMT
Report

சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இணுவில் பகுதியில் அயலில் உள்ள இரண்டு குடும்பங்கள், தங்கள் தங்கள் வீட்டில் இரண்டு கோயில்களை ஆதரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இரண்டு குடும்பத்திற்கும் இடையே முரண்பாடு இருந்துள்ளது.

பொய் சொல்வதை சட்டபூர்வமாக்கியுள்ள அரசு : கடுமையாக சாடும் நாமல்

பொய் சொல்வதை சட்டபூர்வமாக்கியுள்ள அரசு : கடுமையாக சாடும் நாமல்

மகனின் அழுகை 

இதனடிப்படையில், நேற்றுமுன்தினம் (23) பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் பூ பறிப்பதற்காக வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அயல் வீட்டு இளைஞன் குறித்த சிறுவனுடன் முரண்பட்டு விட்டு தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதன்போது சிறுவன் தனது வீடு நோக்கி ஓடிவந்தவேளை தாக்கிய இளைஞனும், அவரது தந்தையும் சிறுவனை துரத்திக்கொண்டு வந்தனர்.

யாழில் கொலை வெறித் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் பாதிப்பு | Murderous Attack In The Inuvil Area

இதன்போது தனது மகனின் அழுகை குரலை கேட்ட தந்தை எழுந்து வீட்டுக்கு வெளியே வந்த வேளை கொட்டனுடன் வந்த இளைஞனும், தந்தையும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், அவர் மயங்கி கீழே விழுந்தபோது அவரது மனைவி ஓடி வந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

மீண்டும் காவல்துறையில் நடிகர் அல்லு அர்ஜீன் : தொடரும் குற்றச்சாட்டுக்கள்

அறுவை சிகிச்சை 

குறித்த பெண் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்து மூன்று மாதங்களே நிரம்பிய நிலையில் அவரது வயிற்றில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தனது மகள் மீது தாக்குதல் நடாத்துவதை தடுப்பதற்கு வந்த தாய் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட வேளை அவரும் படுகாயமடைந்துள்ளார்.

யாழில் கொலை வெறித் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் பாதிப்பு | Murderous Attack In The Inuvil Area

இந்நிலையில் படுகாயமடைந்த மாமியாரும் மருமகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், தனது ஏனைய பிள்ளைகளை வீட்டில் இருந்து கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால் குறித்த குடும்பப் பெண் வைத்தியசாலைக்கு செல்லாமல் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு - பு.கஜிந்தன்

அநுரவின் ஆட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்படும் : வடக்கு ஆளுநர் நம்பிக்கை

அநுரவின் ஆட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்படும் : வடக்கு ஆளுநர் நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்