நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
இரண்டாம் இணைப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நாகபூசணி அம்பாள் பிள்ளையார் மற்றும் முருகபெருமான் சகிதம் வலம்வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
கொடியேற்ற திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய சோபகிருது வருட வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று (19) மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது இன்றையதினம் காலை ஆலய அறங்காவலர் சபை அலுவலகத்தில் இருந்து ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.









