வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்றாகும்.
இன்றைய (10) இருபத்தைந்தாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் ஆரம்பமாகிய நிலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தனின் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றவண்ணம் உள்ளது.
அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று (22) காலை தீர்த்தத் திருவிழா நடைபெறுவதுடன் மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25