தாயகத்தைக் கடந்து சர்வதேச அரங்கில் ராஜபக்ச குடும்பத்தின் மீதான அதிருப்தி!
பிரித்தானியா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்குப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
உள்நாட்டுப் போர்க்கால அநீதிகளுக்கு நீதி கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் நாமலுக்குச் சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றவருக்கு, புலம்பெயர் மக்களின் இந்த எதிர்ப்பு ஒரு கசப்பான அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தாயகத்தைக் கடந்து சர்வதேச அரங்கில் ராஜபக்ச குடும்பத்தின் மீதான அதிருப்தி இன்னும் குறையவில்லை என்பதை இது பாடமாக உணர்த்தியுள்ளது.
உலகத் தமிழர்களின் நீதிக்கான குரலை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்பதை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்தும் அண்மைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |