நாமல் ராஜபக்சவிற்கு ஏற்பட்ட கவலை
Colombo
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச, தற்போது இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை (SOEs) தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
"நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார்மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் அதே வேளையில், ஏற்கனவே இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்" என நாமல் ராஜபக்ச கூறினார்.
முடிவின் பின்னணியில் உள்ள காரணம்
"இலாபகரமான நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்