ரணிலின் அரசியலால் இன்று சிறையில் வாடும் நாமல்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சர் ஹெரத் கருத்து
“இது நாங்கள் தாக்கல் செய்த வழக்கு அல்ல. இது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் முன்னரே தாக்கல் செய்யப்பட்டது. அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம், அவர்களுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம். முந்தைய அரசாங்கம் இந்த வழக்கு தொடர்பில் முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ முன்னெடுக்கத் தவறியது.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் முறையாக விசாரிப்பதற்குத் தேவையான வசதிகளும் நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |