முறையான நீதியை தள்ளிவைக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம்! ஐ.நா கடும் கண்டனம்
இலங்கையில் முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு
ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை
ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.

பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதாகவும், இதன் விளைவாக நியாயமான வழக்கு விசாரணை, முறையான நீதிமன்ற மேற்பார்வை என்பன உள்ளடங்கலாக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர், சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது.
அதேபோன்று அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்தவேண்டும்.
யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
'2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் வருமானத்தில் 82 சதவீதமானவை ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே சுகாதாரம், கல்வி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.
இவ்விடயங்களுக்கும், குறிப்பாக மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்குமான நிதி ஒதுக்கீடு அவசியமாகும்.
மேலும் இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கிறது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |