நாசாவின் அடுத்த நகர்வு! வியாழனின் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம்
விண்வெளியில் பூமியை தவிர்த்து வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுகளின் அடுத்த நகர்வாக நாசா வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா நிறுவப்பட்டது தொடக்கம் இன்று வரை பல சாதனைகளை படைத்துள்ளது.
அந்த வகையில், 95 நிலவுகள் சுற்றி வருகின்ற சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் (jupiter) கிரகத்தின் ஒரு நிலவுக்கு விண்கலமொன்றை நாசா அனுப்பியுள்ளது.
4ஆவது நிலவு - யுரோப்பா
இதன்போது, யுரோப்பா(Europa) என்று அழைக்கப்படும் வியாழனின் 4ஆவது நிலவுக்கே விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. குறித்த யுரோப்பா நிலவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது.
இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்பு நீர் கடல் காணப்படுவதாகவும் அந்த நீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வினை மேற்கொள்ள யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.
சுமார் 6 ஆயிரம் கிலோ எடை
சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030ஆம் ஆண்டு யுரோப்பாவின் சுற்றுப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
