விவசாயிகளுக்கு நற்செய்தி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2026 சிறுபோக அறுவடை காலத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் உத்தரவாத விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவாத விலைத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் நாட்டு நெல்லை ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல்லை ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் மற்றும் கீரி சம்பா நெல்லை ஒரு கிலோகிராம் 140 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கம்
சிறுபோக அறுவடையின் போது நெல் சந்தையில் ஸ்திரத்தன்மையைப் பேணுப்படுவதையும், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் வசந்த தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நுகர்வோருக்குப் போதுமான அரிசி விநியோகத்தை உறுதி செய்வதற்கும், சந்தைத் தட்டுப்பாடுகளைத் தணிப்பதற்கும், தற்போதுள்ள அரிசி இருப்புகளைச் சந்தைக்கு விரைவாக விடுவிக்கும் ஒரு திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |