செவ்வாய் கிரகம் தொடர்பில் நாசா வெளியிட்ட அறிவிப்பு : வைரலாகும் காணொளி
அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா (Nasa) செவ்வாய் கிரகத்தின் பரந்த நிலப்பரப்பு தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளது.
விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்ற நாசா செவ்வாய்க் கிரக ஆய்வுக்காக நீண்ட இலக்குகளை வைத்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, 2030களில் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
படம்பிடிக்கப்பட்ட நிலப்பரப்பு
மேலும் இதற்காக செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
NASA shared insane panoramic photos of Mars pic.twitter.com/Uxfr3DoPl7
— Pubity (@pubity) March 6, 2025
இந்நிலையில் மார்ஸ் ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் போன்ற ஆர்பிட்டர்களைப் பயன்படுத்தியும், அதி நவீன கமராக்களை பயன்படுத்தியும் செவ்வாய் கிரகத்தின் பரந்த நிலப்பரப்பு படம்பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாசா செவ்வாய் கிரகத்தின் காணொளியை வெளியிட்டுள்ள நிலையில், அந்த காணொளி குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த காட்சிகள் மக்களை ஈர்ப்பதற்காக மட்டுமல்லாமல், பாறை வடிவங்கள், அரிப்பு வடிவங்கள் மற்றும் வளிமண்டல நிலைமைகளைப் படிப்பதன் மூலம், விஞ்ஞானிகள் மனித பயணங்கள் மற்றும் ஆய்வுக்கான சாத்தியமான தரையிறங்கும் தளங்களை தீர்மானிக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
