ரணிலுக்கு தேசியப்பட்டியல் ஆசனம்! திட்டங்கள் தொடர்பில் ஐ.தே.க விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் வஜிர அபேவர்த்தனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் கேட்ட போது அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றார்.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவிடமும் குறித்த கேள்வியை கேட்போது, கோபத்தில் பொய் செய்திகளை உருவாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் அவ்வாறு ஒன்றும் கதைக்கவில்லை என்றே கூறியுள்ளார். இதன்படி ரணிலை தேசிய பட்டியலில் உறுப்பினராக்கும் முயற்சி எடுத்திருக்க கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

