மது போதையால் நடந்த விபரீதம்!
சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாவிகல ஆடிகம பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர் தனது வீட்டில் மற்றுமொரு குழுவினருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது, அந்த இடத்தில் இருந்த மற்றுமொரு நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பியோட்டம்
சம்பவத்தை அடுத்து சந்தேகநபர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கம்பியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
