லொறிக்கும் சுவருக்கும் இடையில் நசுங்கி இளைஞர் உயிரிழப்பு!
கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருட்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01-05-2026) இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடிக்கு உணவுப் பொருள்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று, பொருள்களை இறக்குவதற்காகப் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
இதன்போது, லொறியின் பின்புறத்துக்கும் அங்கிருந்த களஞ்சியசாலைச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளரான குறித்த இளைஞர் எதிர்பாராத விதமாகச் சிக்குண்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக லொறியின் சாரதியை நாவலப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |