தமது எதிர்பார்பை வெளியிட்ட மைத்திரி தரப்பு
maithripala sirisena
new party
negotiation
By Vanan
புதிய கூட்டணியை அமைப்பதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்தார்.
தமது கட்சியின் அகில இலங்கை மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், “தற்போதும் நாம் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதே இதன் எதிர்பார்ப்பாகும்.
இருந்தாலும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை” என்றார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்