அடங்க மறுக்கும் இஸ்ரேல் : ஈரானுக்கு எதிரான போர் தொடருமென சூளுரை
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போராடும் என்று சூளுரைத்துள்ளார். மேலும், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனையும் அவர் விமர்சித்துள்ளார்.
"எனது தலைமையின் கீழ் இஸ்ரேல், ஈரானின் பயங்கரவாத ஆட்சி மற்றும் அதன் பதிலிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடும்," என்று நெதன்யாகு X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
துருக்கி ஜனாதிபதி மீதும் கடும் விமர்சனம்
மேலும், எர்டோகன் ஈரானுக்கு "இணங்கிப் போவதாகவும்", குர்து குடிமக்களின் "படுகொலைகளுக்கு" அவரே பொறுப்பு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Israel under my leadership will continue to fight Iran’s terror regime and its proxies, unlike Erdogan who accommodates them and massacred his own Kurdish citizens.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) April 11, 2026
காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் நெதன்யாகுவின் இந்தப் பதிவு, ஈரானில் போர் நிறுத்தம் மற்றும் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையிலும் வந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |