உக்ரைனுக்கு வலு சேர்க்கும் நெதர்லாந்து: வெளியான அதிரடி அறிவிப்பு
உக்ரைனுக்கு (Ukraine) சுமார் ரூபா1,750 கோடி இராணுவ உதவி வழங்க நெதர்லாந்து (Netherlands) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா (Russia) போர் தொடுத்தது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா (United States), ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன.
இராணுவ உதவி
இதனால் உக்ரைன் இன்னும் இந்த போரில் தாக்குப்பிடித்து நிற்கின்றது.
இதனடிப்படையில், உக்ரைனுக்கு சுமார் ரூபா 1,750 கோடி இராணுவ உதவி வழங்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளது.
ட்ரோன் உற்பத்தி
இதில் 100 ட்ரோன் கண்டறியும் ரேடார்கள் மற்றும் வான்பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆறு லட்சம் ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை நெதர்லாந்துடன் உக்ரைன் இராணுவம் செய்திருந்தது.
ஒப்பந்தத்தின்படி ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் போன்றவை இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என நெதர்லாந்து இராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
