போர் நிறுத்தத்தை வரவேற்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு நேரடி அழைப்பு
இஸ்ரேல் (Israel) போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் (Iran) மதிக்கும் என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian)தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இனி இரு நாடுகளும் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வான்வழித் தாக்குதல்
இருப்பினும், ட்ரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பையும் மீறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை நான்கு மணிக்குள் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை நிறுத்தினால், ஈரானும் பதில் தாக்குதலை நிறுத்தும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி தெரிவித்திருந்தார்.
போர் நிறுத்த அறிவிப்பு
ட்ரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு ஈரான் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் தொடர்பாக முதல் கருத்தாக இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தங்கள் இராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை மதிப்போம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
