ட்ரம்ப் அறிவித்த போர்நிறுத்தமும் மீறித் தாக்கிய இஸ்ரேலும்!!
கட்டாரில் அமெரிக்கா கொண்டிருக்கும் மிகப்பெரிய ராணுவத் தளமான 'அல் உதெய்த்' மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குள், அதற்குப் பதிலளிக்காமல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென இஸ்ரேல்–ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலாக, ஈரான் அமெரிக்க தளத்தைத் குறிவைத்து தாக்கிய நிலையில், உலகம் முழுவதும் ஒரு கடுமையான பதிலடியை எதிர்பார்த்தது.ஆனால் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து, எதிர்பார்ப்புகளை மாற்றி அமைத்தது.
அதன்போது, ஈரானின் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலை அவர் பாராட்டியும், நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற சூழ்நிலையில், ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்பு, உண்மையில் அமைதிக்கு வழிவகுக்கிறதா, அல்லது குழப்பத்துக்கா? என்பது சர்வதேச பரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கு மோதல் உட்பட உலகின் அனைத்து விடயங்களிலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பின் ஆதிக்கம் குறித்து விளக்கமாக எடுத்து கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...

மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களுக்கு மரண வளையம்: இஸ்ரேலுக்கு இன்று ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
