புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது மேலும் தாமதமாகும்!
தொடர்ச்சியாக வலுத்துவரும் எதிர்ப்புக்கள் மற்றும் ஆளுங்கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் புதிய புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதை அரசு தாமதப்படுத்தியுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடலுக்கு களம் அமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சமர்ப்பிப்பு
இந்த வாரம் குறித்த சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாடாளுமன்ற சமர்ப்பிப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்புக்கள் மற்றும் ஆளுங்கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் போன்றவை தாமதத்திற்கு காரணமாக சொல்லப்படுகின்றது.
